Sunday, 28 August 2011


படத்தை ஒன்று சேருங்கள்




சிகரம்

மகனே!!!
நீ..........
வெற்றிச்சிகரத்தை
அடைவாய்..
நீ......
தைரியத்தாயின்
மகனாய்
இருந்தால்!!!!!

அன்புதான்

இருளே!
நீ விடியும் வரை தானே
நீ இருப்பாய்!

மனிதனே!
நீ மடியும் வரைதானே
நீ இருப்பாய்!

இளமையே!
நீ முதுமை வரைதானே
நீ இருப்பாய்!

ஆனால்
அன்பே!!!!
நீ என்றென்றும்
நிலைத்திருப்பாய்
அல்லவா!!
உன் சிரிப்பில்

அடியே!!!!!!!!!!!!
என்
மகளே!
உன்
பொக்கைவாய்ச் சிரிப்பில்
என்
'அன்னையின் தாயைக்'
காண்கிறேனே!

அன்பு அம்மா..........


அன்பின் உருவமாய் தோன்றினாய் அம்மா..
என்னை ஆசையுடன் வளர்த்து ஆளாக்கினாய்..

உன் அன்பிற்கு இணையாக
வேறு எந்த அன்பும் இணையாகாது அம்மா..

அன்பின் சுரங்கமாய் இருக்கும் உன்னை கொடுத்த
ஆண்டவனுக்கு கோடானு கோடி நன்றி!!!!!

என் கவிதை கிறுக்கல்..


என் கன்னத்தில் ஏன் இவ்வளவு ஈரம்..
ஓ!! என் அன்னையின் எச்சிலா..

என் கைகளில் ஏன் இவ்வளவு ஈரம்..
ஓ!! என் தந்தையின் கரங்களிலிருந்தா....

என் உடம்பில் ஏன் இவ்வளவு ஈரம்..
ஓ!!, மின்சாரமே நீ சென்று விட்டாயா...

 அன்புள்ள அப்பா...


தனக்கென எதுவும்..
வேண்டாம் வேண்டாம்
என்று..
வேண்டும்.. வேண்டும்..
என்று
கேட்கும் எனக்கு
கேட்டதை
வாங்கி தந்த
என் தெய்வத்திற்கு சமமான
தந்தையே
நீயே மீண்டும்
என் மகளுக்கு
பிறந்தால்
திருப்பி தருவேனே
ஈடு இணையில்லா
நீ எனக்கு தந்த அன்பையும்
பரிவையும்...

Saturday, 27 August 2011

செல்லக் குழந்தை..
.


அன்புச் செல்லமே....
என்னவென்று சொல்வதம்மா.....!!!!
உன் வட்ட நிலா போன்ற 
உன் அழகை...!!!!

என் உள்ளம் மயங்கியதே...
எந்த  இசைக் கருவியாலும் தர முடியாத 
உன் சிரிப்பு  என்னும் இசைகேட்டு.....

நீ செய்யும் குறும்புகளை......
காண என் கண்கள் இரண்டு காணாதே....

உன்னை வாரி அணைத்து 
கன்னத்தில் முத்தமிட்டால் .....
உன் பஞ்சு போன்ற கன்னம்  வலிக்குமோ......

அபிநயம் பிடிக்கும் உன் கண்களை....காண...
என் இரண்டு கண்கள் காணாதே.. !!!!


நீ நடந்தால் உன் பாதம் வலிக்குமோயென்று...
விரித்தேனே..... பூக்களாலான விரிப்பை....


செல்லமே..... நீ...
கடவுளின் தூதுவளோ......


























































Thursday, 25 August 2011

Welcome

வருக..வருக.. அறிந்துகொள்வோம்.blogspot